Enter your Email Address to subscribe to our newsletters

சிம்லா, 26 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவின் வடதிசை மாநிலங்கள் பலவற்றில் பனிச்சரிவு ஆக்கிரமித்துள்ளது.
எங்கு பார்த்தாலும் குளிர் வாட்டி வதைப்பதனால், மக்களின் தினசரி நடவடிக்கைகள் பெருமளவில் ஸ்தம்பித்துள்ளன.
இந்த நிலையில், இமாசல பிரதேசத்தில் இன்று இரவு முதல் 28-ந்தேதி காலை வரை பரவலாக மழை மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, ஹிமாசல பிரதேசத்தின் சில வட்டாரங்களுக்கு வானிலை இலாகா சார்பில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக எதிர்வரும் 27-ம் தேதி ஹிமாசல பிரதேசத்தின் சம்பா, குலு, கின்னோர் மற்றும் லாறல்-ஸ்பிதி போன்ற உயரமான மாவட்டங்களில், பெருமழை மற்றும் பனிப்புயல் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதோடு, உயரம் குறைவான குன்றுகளிலும், சமவெளிகளிலும், அருகில் உள்ள மலைப்பிரதேசங்களிலும் லேசான தூறல் முதல் மிதமான மழை வரை பொழிய சாத்தியம் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM