மகாத்மாவின்‌ சுதேசி கொள்கையே வளர்ந்த மற்றும்‌ தற்சார்பு கொண்ட இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டின்‌ அடிப்படைத்‌ தூண்‌ - பிரதமர்‌ மோடி
புதுடெல்லி, 30 ஜனவரி (ஹி.ச.) வளர்ச்சி மிகு இந்தியாவையும்‌, தன்னிறைவு பெற்ற இந்தியாவையும் உருவாக்கும் நம் கனவுக்கு மகாத்மா காந்தியின் சுதேசி தத்துவமே ஆணிவேர் என்று பிரதமர் மோடி அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன
மகாத்மாவின்‌ சுதேசி கொள்கையே வளர்ந்த மற்றும்‌ தற்சார்பு கொண்ட இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டின்‌ அடிப்படைத்‌ தூண்‌ - பிரதமர்‌ மோடி


புதுடெல்லி, 30 ஜனவரி (ஹி.ச.)

வளர்ச்சி மிகு இந்தியாவையும்‌, தன்னிறைவு பெற்ற இந்தியாவையும் உருவாக்கும் நம் கனவுக்கு மகாத்மா காந்தியின் சுதேசி தத்துவமே ஆணிவேர் என்று பிரதமர் மோடி அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

தேசப்பிதா மகாத்மா காந்திக்கு நினைவு நாளில் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். அவர் எப்போதும் சுதேசிக்கு முதன்மை அளித்தார்.

அதுவே, மேம்பட்ட மற்றும் தன்னிறைவு இந்தியாவிற்கான நமது அர்ப்பணிப்பின் அஸ்திவாரமாகும்.

.அவரின் ஆளுமையும், செயல்களும் நாட்டு மக்கள் கடமை தவறாமல் நடக்க தூண்டுகோலாக இருக்கும்.

இவ்வாறு அவர்‌

குறிப்பிட்டுள்ளார்‌.

Hindusthan Samachar / JANAKI RAM