நிதி மோசடிக்கு சைபா் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டதாக வந்த புகாா்களையடுத்து வின்கோ செயலியை முடக்கிய மத்திய அரசு
புதுடெல்லி, 31 ஜனவரி (ஹி.ச.) சைபர் கிரிமினல்களால் நிதி முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக வந்த புகார்களின் விளைவாக, வின்கோ செயலியின் செயல்பாட்டை மத்திய அரசாங்கம் முடக்கியுள்ளது. அந்த ஆண்ட்ராய்டு செயலி, கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து மொபைல் போன்களில்
நிதி மோசடிக்கு சைபா் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டதாக வந்த புகாா்களையடுத்து வின்கோ செயலியை முடக்கிய மத்திய அரசு


புதுடெல்லி, 31 ஜனவரி (ஹி.ச.)

சைபர் கிரிமினல்களால் நிதி முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக வந்த புகார்களின் விளைவாக, வின்கோ செயலியின் செயல்பாட்டை மத்திய அரசாங்கம் முடக்கியுள்ளது.

அந்த ஆண்ட்ராய்டு செயலி, கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், பயனர்களுக்குத் தெரியாமலேயே, தானாகவே பிற நபர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பும் திறன் கொண்டது.

இது இணைய குற்றங்களுக்கு ஒரு பாதையை அமைத்தது. இதன் விளைவாக, பயனர்களின் மொபைல் போன்களுக்குள் ஊடுருவி, அந்த போன்களை சைபர் கிரிமினல்கள் உபயோகிக்க இந்த செயலி உதவியது.

தோராயமாக ஒவ்வொரு நாளும் 1.53 கோடி பேருக்கு இந்த குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வந்தன. பலர் இந்த குறுஞ்செய்திகளை நம்பி பணத்தை இழந்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எண்ணற்ற புகார்கள் வந்தன. இதன் தொடர்ச்சியாக, அந்தச் செயலியை மத்திய உள்துறை அமைச்சகமும், அதனுடைய கணினி குற்றத்தடுப்பு பிரிவான இந்திய கணினிவழி குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையமும் இணைந்து முடக்கியுள்ளன.

மேலும், அந்தச் செயலியுடன் சம்பந்தப்பட்ட 4 டெலிகிராம் சேனல்கள் (1.53 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டது), செயலியை பிரபலமாக்கும் நோக்கத்தில் வெளியான 50-க்கும் மேற்பட்ட யூடியூப் வீடியோக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM