ஆனந்தபூர் தொழிற்சாலை தீ விபத்திற்கு மம்தா பானர்ஜி அரசின் ஊழலே காரணம் - மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
கொல்கத்தா, 31 ஜனவரி (ஹி.ச.) மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள பாரக்பூரில் இன்று நடைபெற்ற பாஜ கூட்டத்தில் மத்திய உள்துறை அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் மாந
ஆனந்தபூர் தொழிற்சாலை தீ விபத்திற்கு மம்தா பானர்ஜி அரசின் ஊழலே காரணம் - மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு


கொல்கத்தா, 31 ஜனவரி (ஹி.ச.)

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள பாரக்பூரில் இன்று நடைபெற்ற பாஜ கூட்டத்தில் மத்திய உள்துறை அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் மாநில மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசியம். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) அரசு சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது. எல்லைப் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது. ஊழலை வேரூன்றச் செய்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அரசு அழிந்து போவது உறுதி.

மேற்கு வங்கத்தில் ஊடுருவல் நடந்து வருவது அது முழு நாட்டிற்கும் ஒரு பாதுகாப்புப் பிரச்னையாக மாறியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும், ஊடுருவல்காரர்கள் அதன் வாக்கு வங்கி என்பதால், எல்லை வேலி அமைக்க திரிணமுல் காங்கிரஸ் அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு நிலம் வழங்கவில்லை.

சட்டவிரோத குடியேறிகளை மாநில நிர்வாகம் மற்றும் போலீசார் தடுக்கவில்லை, மாறாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர் கோல்கட்டா அருகே ஆனந்தபூரில் உள்ள தொழிற்சாலையில் சமீபத்தில் தீ பற்றி எரிந்தது. இது ஒரு விபத்து அல்ல, மம்தா பானர்ஜி அரசின் ஊழல் காரணமாக ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை உரிமையாளர்கள் ஏன் காவலில் எடுக்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் நிர்வாகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மதுவா மற்றும் நாமசூத்ரா சமூகங்களை திரிணமுல் காங்கிரஸ் மிரட்டுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பயப்பட ஒன்றுமில்லை. ஊழல் கறைபடிந்த அமைச்சர்களுக்கு சட்டசபை தேர்தல் போட்டியிட மறுப்பதன் மூலம் அதைச் சமாளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மம்தா பானர்ஜி நிரூபிக்க வேண்டும்.

பாஜ 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திரிணமுல் காங்கிரஸ் அரசை வேரோடு பிடுங்கி, அதற்கு பதிலாக தேசபக்தர்கள் மற்றும் தேசியவாதிகளின் அரசு அமையும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Hindusthan Samachar / vidya.b