நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் - ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது உறுதியானது
புதுடெல்லி, 8 ஜனவரி (ஹி.ச.) நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகள் வதோதரா (ஜனவரி 11), ராஜ்கோட் (ஜனவ
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் - ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது உறுதியானது


புதுடெல்லி, 8 ஜனவரி (ஹி.ச.)

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகள் வதோதரா (ஜனவரி 11), ராஜ்கோட் (ஜனவரி 14), இந்தூர் (ஜனவரி 18) ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரை தவறவிட்ட ஷ்ரேயாஸ் அய்யர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.

அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் முழுஉடற்தகுதி சான்றிதழ் பெறவில்லை எனவும் இந்த தொடரில் விளையாடமாட்டார் எனவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், பிசிசிஐ மருத்துவக்குழு ஷ்ரேயாஸ் அய்யருக்கு முழுஉடற்தகுதி சான்று அளித்துள்ளது.

இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் நியூசிலாந்து தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM