வேலுண்டு வினையில்லை என்பதற்கு ஏற்ப வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் இந்த தைப்பூசம் திருநாள் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சென்னை, 01 பிப்ரவரி (ஹி.ச) தமிழக மக்கள் அனைவருக்கும் தனது தைப்பூச வாழ்த்துக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இனிய தைப்பூசத் திருநா
Eps


Tw


சென்னை, 01 பிப்ரவரி (ஹி.ச)

தமிழக மக்கள் அனைவருக்கும் தனது தைப்பூச வாழ்த்துக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள், அறமும் வீரமும் இணைந்த தெய்வ வடிவமாக போற்றப்படும் வேலவன் அருளால்,

வேலுண்டு வினையில்லை என்பதற்கு ஏற்ப

வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் , இந்த தைப்பூசம் திருநாள்.

வேல் ஏந்தி தீமைகளை அகற்றி, அன்பும் கருணையும் அருளும் முருகப் பெருமானின் பூரண அருளால், உலகெங்கும் வாழும்

தமிழர்கள் வாழ்வு மலரட்டும். வெற்றிகள் தொடரட்டும். தீமையின் பிடியில் இருந்து தமிழகம் மீளட்டும். கந்தனின் அருளால், தமிழ்நாடு உயர்ந்து ஒளிரட்டும்.

#தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக எனது தலைமையிலான , அம்மாவின் அதிமுக அரசு அறிவித்தமையை உள்ளார்ந்த பெருமிதத்தோடு நினைவுகூர்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ