Enter your Email Address to subscribe to our newsletters

மகாராஷ்டிரா, 11 பிப்ரவரி (ஹி.ச.)
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக சஃபாலே காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் தத்தா ஷெல்கே கூறுகையில்,
ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பையின் ஜூஹுவிலிருந்து குஜராத்தின் சூரத்துக்கு பறந்து கொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்ரில் விமானி, ஒரு பயிற்சி விமானி மற்றும் ஒரு தொழில்நுட்ப பொறியாளர் உட்பட நான்கு பேர் இருந்தனர்.
ஹெலிகாப்டர் சஃபாலே மற்றும் கெல்வா சாலை நிலையங்களுக்கு இடையில் பறந்து கொண்டிருந்தபோது, ஹெலிகாப்டரில் 'சிவப்பு அலர்ட்' எச்சரிக்கையை விமானி கவனித்தார். இதையடுத்து திறந்தவெளியில் அவசரமாக தரையிறங்க அவர் முடிவு செய்தார்.
ஹெலிகாப்டர் நேற்று மதியம் 12.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள வித்யா வைபவ் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் தரையிறங்கியது.
விமானப் பொறியாளர் தொழில்நுட்பக்கோளாறை கண்டறிந்து சரிசெய்தார். சுமார் 40 நிமிடங்கள் அந்த இடத்திலேயே இருந்த பிறகு, ஹெலிகாப்டர் மதியம் 1.10 மணியளவில் பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட்டு ஜூஹுவுக்குத் திரும்பியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு போலீஸ் குழு அந்த நேரம் முழுவதும் அந்த இடத்தில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam