Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 பிப்ரவரி (ஹி.ச.)
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ்,
2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்கத்திற்கு 14 ஆயிரத்து 205 கோடி ரூபாய் என்ற சாதனை ரயில்வே பட்ஜெட்டை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
2009 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மாநிலத்திற்கான ரயில்வே பட்ஜெட் நான்காயிரத்து 300 கோடி ரூபாய் மட்டுமே.
மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நான்காயிரத்து 662 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாகவும், அதில் இதுவரை 27 சதவீதம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பல ரயில்வே திட்டங்கள் உள்ளன, அங்கு நிலம் கையகப்படுத்தும் செயல்முறை இன்னும் தொடங்கப்படவில்லை.
என்று கூறினார்.
மகாராஷ்டிராவைப் பற்றிப் பேசுகையில்,
ரயில்வே மேம்பாட்டுப் பணிகள் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் ரயில்வேக்கு பட்ஜெட்டில் 23 ஆயிரத்து 926 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் போது ஆயிரத்து நூறு கோடி ரூபாய் மட்டுமே.
மாநிலத்தில் உள்ள தொழில்துறை நகரங்களை இணைக்க பல புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
என்று அமைச்சர் மேலும் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM