Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 பிப்ரவரி (ஹி.ச.)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12-ம் தேதி தேசிய உற்பத்தித்திறன் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் தொடங்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நோக்கம்:
குறைந்த வளங்களைப் பயன்படுத்தி, அதிகப்படியான மற்றும் தரமான உற்பத்தியைப் பெருக்குவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இது வெறும் தொழில்சாலை உற்பத்தியை மட்டும் குறிக்காமல், தனிமனித முன்னேற்றம், சிறந்த மேலாண்மை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியது.
முக்கியத்துவம்:
புதுமை - புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வேலைகளை எளிமையாக்குதல்.
நேர மேலாண்மை - கால விரயத்தைத் தவிர்த்து, திட்டமிட்டபடி இலக்குகளை அடைதல்.
திறன் மேம்பாடு - தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்துதல்.
கழிவு மேலாண்மை - வளங்களை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துதல்.
உற்பத்தித்திறன் வாரம்:
பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 18 வரை தேசிய உற்பத்தித்திறன் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த வாரத்தில் கருத்தரங்குகள், போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் உற்பத்தித்திறனின் அவசியம் மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.
உழைப்பு மட்டும் உயர்வு தராது, அந்த உழைப்பு சரியான திட்டமிடலுடன் கூடிய உற்பத்தித்திறனாக மாறும்போதுதான் நாடு வல்லரசாகும்.
எனவே, நம் அன்றாட பணிகளில் உற்பத்தித்திறனை அதிகரித்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்போம்.
Hindusthan Samachar / JANAKI RAM