Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 பிப்ரவரி (ஹி.ச.)
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட வணிக ஒப்பந்தத்தை கண்டித்து எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு வைக்கப்பட்ட சூழ்ச்சி என்று விமர்சித்து, பதாகைகளை ஏந்தி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாகவும் முழக்கங்களை எதிரொலித்தனர்.
தொழிலாளர் சட்ட திருத்தம், வணிக ஒப்பந்தங்கள், தனியார்மயமாக்கல், தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள் உட்பட பல விஷயங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்த விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM