Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத், 17 பிப்ரவரி (ஹி.ச)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (பிப்ரவரி 17) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சோலா சிவில் மருத்துவமனையில் ஒரு நடமாடும் இரத்த சேகரிப்பு வேனைத் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, அவர் காந்திநகருக்குச் சென்றார், அங்கு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அவரை வரவேற்றார். பின்னர் அமித் ஷா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கூட்டுறவு அமைச்சர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதாவது,
இன்று, அகமதாபாத்தில் உள்ள சோலா சிவில் மருத்துவமனையில் ஒரு நடமாடும் இரத்த சேகரிப்பு வேன் திறக்கப்பட்டது. இது தொலைதூரப் பகுதிகளிலும் அவசர காலங்களிலும் இரத்த சேகரிப்பை இன்னும் எளிதாக்கும்.
இன்று, அகமதாபாத்தில் உள்ள சோலா சிவில் மருத்துவமனையில் ஒரு நடமாடும் இரத்த சேகரிப்பு வேன் திறக்கப்பட்டது. இது தொலைதூரப் பகுதிகளிலும் அவசர காலங்களிலும் இரத்த சேகரிப்பை இன்னும் எளிதாக்கும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b