Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர், 17 பிப்ரவரி (ஹி.ச.)
விவசாயிகளுக்கான 'பாரத் விஸ்டார்' டிஜிட்டல் தளத்தை ஜெய்ப்பூரில் இன்று மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார்
இந்த முயற்சி விவசாயிகளை புத்திசாலிகளாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும், தகவல் வளம் மிக்கவர்களாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது
இந்த தளத்தின் மூலம், விவசாயிகள் தங்கள் மொபைல் போன்கள் மூலம் ஒரே அழைப்பில் தேவையான அனைத்து தகவல்களையும் அணுக முடியும்.
இந்த டிஜிட்டல் தொடக்க நிகழ்வில் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது,
'பாரத் விஸ்டார்' விவசாயத் துறையில் டிஜிட்டல் புரட்சியை நோக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க படி ஆகும்.
இது பயிர் சார்ந்த அறிவியல் ஆலோசனை சேவைகள், மண்டி விலைகள் மற்றும் வானிலை தகவல்களை விவசாயிகளுக்கு வழங்கும்.
டிஜிட்டல் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை கிராமப்புற இந்தியாவிற்கு விரிவுபடுத்துவதில் இந்த முயற்சி தீர்க்கமானதாக இருக்கும்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, அவர்களை விவசாயத்துடன் மட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்புடனும் இணைப்பது அவசியம்.
இதற்கு தொழில்நுட்பம் மிக முக்கியமானது.என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய, ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா,
இந்த டிஜிட்டல் முயற்சி விவசாயிகள் புரட்சியின் தொடக்கம்.
விவசாயிகள் இதை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும். என்று கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM