சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் மாயமான வழக்கு - தலைமை அர்ச்சகருக்கு ஜாமீன் வழங்கியது கேரள நீதிமன்றம்!
கொல்லம், 18 பிப்ரவரி (ஹி.ச.) சபரிமலை ஐயப்பன் ஆலய கருவறையில் தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்குகளில், சபரிமலை தந்திரி (பிரதான அர்ச்சகர்) கண்டரரு ராஜீவருக்கு இன்று விஜிலென்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக காவல் வட்டாரங்கள் தெரிவித்து உள்
தங்கம் மாயமான வழக்கில் சபரிமலை தலைமை அர்ச்சகருக்கு ஜாமீன் வழங்கிய கேரள நீதிமன்றம்


கொல்லம், 18 பிப்ரவரி (ஹி.ச.)

சபரிமலை ஐயப்பன் ஆலய கருவறையில் தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்குகளில், சபரிமலை தந்திரி (பிரதான அர்ச்சகர்) கண்டரரு ராஜீவருக்கு இன்று விஜிலென்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக காவல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

துவாரபாலகர்களின் (வாசலில் காவல் காக்கும் தெய்வம்) திருவுருவச் சிலைகளில் இருந்து தங்கம் மாயமான வழக்கில் ராஜீவர் 16-வது குற்றவாளியாக பெயர் பொறிக்கப்பட்டுள்ளார்.

அது போலவே, ஸ்ரீகோவில் (கர்ப்பக்கிரகம்) கதவு சட்டங்களில் இருந்து விலையுயர்ந்த உலோகம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் A-13 குற்றவாளியாகவும் உள்ளார்.

இந்த இரண்டு வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, ராஜீவர், கோயில் நடைமுறைகளை மீறி சபரிமலை கோவிலில் இருந்து தங்க தகடுகள் அகற்றப்பட்டதை அறிந்திருந்தும், அதனை 2019-ல் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மெத்தனமாக இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM