Enter your Email Address to subscribe to our newsletters

புவனேஸ்வர், 18 பிப்ரவரி (ஹி.ச.)
ஒடிசாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரைக்கான கூட்ட மேலாண்மை் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த மாநில அரசு ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக அதிகாரிகள் இன்று குறிப்பிட்டனர்.
பூரி மாவட்ட ஆட்சியர் திப்யஜோதி பரிதா மற்றும் பூரி காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீக் சிங் ஆகியோர் இரத யாத்திரை செயல் திட்டம் 2026ஐ கூட்டத்தில் சமர்ப்பித்ததுடன், மிகப்பெரும் திருவிழாவிற்கு பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை வேண்டியதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர்,
முந்தைய காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், குறிப்பாக 2025இல் நடந்த தவறான நிர்வாகத்தை மனதில் வைத்து இந்தச் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, கடந்த வருடம் பூரியில் நடந்த ரத யாத்திரை விழாவின்போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த ஆண்டு, ரத யாத்திரை திருவிழா ஜூலை 16ஆம் தேதியும், 'பஹுதா' யாத்திரை (எதிர் தேர் திருவிழா) ஜூலை 24ஆம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது, ஸ்ரீ ஜெகநாதர் கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி அரபிந்த பதீ, தேர் செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் மரங்கள் வாங்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இந்த முறை சரமாலை (தேர்களில் இருந்து தெய்வங்களை கீழே இறக்குவதற்காக தேர்களில் பொருத்தப்படும் பெரிய மர ஏணி) தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய முறை, ஸ்ரீ கண்டிச்சா கோயில் அருகில் மர ஏணிகள் மாற்றப்பட்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
என்று கூறினார்.
இது தொடர்பாக மற்றொரு அதிகாரி,
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், திரளை திறம்பட கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.
இந்திய ரயில்வே, பூரி நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் இடங்களை அதிகப்படுத்தி, சிறந்த திரள் நிர்வாகத்திற்காக இணையவழி பயணச்சீட்டு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஒடிசா காவல்துறை பல இடங்களில் தற்காலிகமாக வாகனங்கள் நிறுத்தும் இடங்களை உருவாக்கும் பணியை மேற்கொள்ளும். அதே நேரத்தில் படா தண்டாவை ஒளிரச் செய்ய 50 உயர் மாஸ்ட் விளக்குகள் நிறுவப்படுவதை உறுதி செய்ய மின்சாரத் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கூட்டத்தின்போது, சாலை பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிக்கப்படும் என்று பணித்துறை உறுதியளித்துள்ளது.
என்று கூறினார்.
கலந்துரையாடலின்போது, தேர் திட்டமிட்டபடி இழுக்கத் தொடங்க ஜெகநாதரின் சடங்குகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டியதன் அவசியம், பூரியின் கிராண்ட் சாலையின் (படா தண்டா) கூட்ட மேலாண்மை, வாகன நிறுத்துமிட வசதிகள், சுகாதார சேவைகள், அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதாரம் குறித்து தலைமைச் செயலர் அறிவுறுத்தினார்.
திரளை ஒழுங்குடன் கண்காணிக்க உத்தரா சக் முதல் படா தண்டா வரை தேவையான சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என்று டிஜிபி ஒய் பி குரானியா பரிந்துரைத்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM