Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 பிப்ரவரி (ஹி.ச.)
திடீர் மென்பொருள் பழுது காரணமாக டெல்லி, மும்பை உட்பட இந்தியாவின் முக்கியமான விமான நிலையங்கள் பலவற்றில் விமானப் போக்குவரத்துச் சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
இதன் விளைவாக பயணிகள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாயினர்.
குறிப்பாக, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களின் விமான நிலையங்களில் இன்று காலை 6:45 மணி முதல் 7:28 மணி வரை ஏறத்தாழ 40 நிமிடங்களுக்கும் மேலாக மென்பொருள் கோளாறு தலைதூக்கியது.
இதனால் விமான நிறுவனங்கள் பயணிகளை உள்நுழைவு செய்வதில் பெரும் இன்னல்களைச் சந்தித்தன.
இதன் எதிரொலியாக இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் போன்ற விமான நிறுவனங்களின் சேவைகள் முற்றிலுமாக முடங்கின.
தற்போது இந்தத் தொழில்நுட்பப் பிரச்சனை சரி செய்யப்பட்டு விமான சேவைகள் மீண்டும் சீரான நிலைக்குத் திரும்பியுள்ளன.
இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக விமான நிறுவனங்களிடமிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.
Hindusthan Samachar / JANAKI RAM