Enter your Email Address to subscribe to our newsletters

புனே, 24 பிப்ரவரி (ஹி.ச.)
ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று முதல் மூன்று மாநிலங்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
அதன்படி ஜனாதிபதி திரௌபதி முர்மு, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களுக்குப் பயணம் செய்யவுள்ளார்.
அவர் இன்று மஹாராஷ்டிரா மாநிலத்திற்குப் புறப்படுகிறார். மும்பை நகரிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்கிறார்.
அடுத்த நாள் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்விலும், பிரம்ம குமாரிகள் நடத்தும் ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து, 26-ஆம் தேதி ஜார்கண்ட் செல்லும் ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜாம்ஷெட்பூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.
அதன் பிறகு, 27-ஆம் தேதி அவர் ராஜஸ்தானின் பொக்ரான் நகருக்குச் செல்கிறார்.
அங்கு இந்திய விமானப்படை நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
Hindusthan Samachar / JANAKI RAM