இனி மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இருந்தால்தான் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை உபயோகிக்க முடியும்
புதுடெல்லி, 27 பிப்ரவரி (ஹி.ச.) இந்தியாவில் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஜியோ சேட், ஸ்னாப்சேட், ஷேர் சாட் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் உபயோகத்தில் உள்ளன. இதில் நிறைய பேர் உபயோகிக்கும் செயலி எதுவென்றால் யோசிக்
இனி மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இருந்தால்தான் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை உபயோகிக்க முடியும்


புதுடெல்லி, 27 பிப்ரவரி (ஹி.ச.)

இந்தியாவில் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஜியோ சேட், ஸ்னாப்சேட், ஷேர் சாட் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் உபயோகத்தில் உள்ளன.

இதில் நிறைய பேர் உபயோகிக்கும் செயலி எதுவென்றால் யோசிக்காமல் வாட்ஸ் அப் என்று சொல்லிவிடலாம். வாட்ஸ் அப் என்பது முக்கியமான தகவல் பரிமாற்ற செயலியாக மாறிவிட்டது.

வாட்ஸ் அப் செயலியை மொபைலில் டவுன்லோட் செய்யும் போது சிம் கார்டு கட்டாயம் தேவை. அதன் பிறகு சிம் கார்டை எடுத்தாலோ அல்லது சிம் கார்டு வேலை செய்யாமல் போனாலோ கூட செயலிகள் தொடர்ந்து உபயோகத்தில் இருக்கும்.

இதனால் சில தவறான விஷயங்கள் நடக்கின்றன. இதனை தடுக்க மத்திய அரசு முக்கியமான நடவடிக்கை ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு எடுத்தது.

அதன்படி, மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இருந்தால்தான் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை உபயோகிக்க முடியும்.

சிம் கார்டு இல்லையென்றால் சமூக வலைத்தள செயலிகள் தானாகவே வேலை செய்யாமல் போய்விடும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை புதிய சட்டதிட்டங்களை அறிவித்தது.

இந்த சட்டதிட்டங்களில் மாற்றம் செய்ய மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், சிம்மை வைத்து சரிபார்க்கும் வேலையை வாட்ஸ் அப் ஆரம்பித்துள்ளது.

வாபீட்டாஇன்போ வெளியிட்ட தகவலின்படி, ஆண்ட்ராய்டு 2.26.8.6 பீட்டா வெர்ஷனில் இதற்கான சோதனை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என்று சொல்லப்பட்டுள்ளது.

இதனால் விரைவில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லையென்றால் வாட்ஸ் அப் வேலை செய்யாத நிலை ஏற்படும்.

Hindusthan Samachar / JANAKI RAM