Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீநகர், 28 பிப்ரவரி (ஹி.ச.)
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் கர்நாடகா - ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின.
இதில் கர்நாடகாவை எளிதில் வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஞ்சி டிராபியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற ஜம்மு & காஷ்மீர் அணியை வாழ்த்திய அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, கர்நாடகாவை அவர்களின் சொந்த மைதானத்தில் வென்ற பிறகு வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு ₹2 கோடி ரொக்கப் பரிசை அறிவித்தார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறுகையில், ஜம்மு & காஷ்மீர் கிரிக்கெட்டுக்கு இது ஒரு திருப்புமுனை தருணம் என்று கூறிய அவர், இந்த மைல்கல் வெற்றி முழு பிராந்தியத்தையும் பெருமை மற்றும் உத்வேகத்தால் நிரப்பியுள்ளது.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விதிகளின் கீழ் வீரர்கள் அரசாங்க நியமனங்களைப் பெறவும் உரிமை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று காலை அவர் போட்டி நடைபெற்ற மைதானத்துக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b