ராஜஸ்தானில்‌ பொது இடங்களில்‌ இஸ்ரேலுக்கு எதிராக‌ ஸ்டிக்கர்களை ஒட்டிய இரு பிரிட்டன்‌ சுற்றுலாப்‌ பயணிகளை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
ஜெய்ப்பூர்‌, 4 பிப்ரவரி (ஹி.ச.) பிரிட்டனைச்‌ சேர்ந்த லூயிஸ்‌ கேப்ரியல்‌ டி மற்றும்‌ அவரது தோழியுமான அனுஷி எம்மா கிறிஸ்டின்‌ ஆகியோர்‌ சுற்றுலா விசாவில்‌ இந்தியாவிற்கு வந்திருந்தனர்‌‌. அவர்கள்‌ ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேலுக்
ராஜஸ்தானில்‌ பொது இடங்களில்‌ இஸ்ரேலுக்கு எதிராக‌ ஸ்டிக்கர்களை ஒட்டிய இரு பிரிட்டன்‌ சுற்றுலாப்‌ பயணிகளை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு


ஜெய்ப்பூர்‌, 4 பிப்ரவரி (ஹி.ச.)

பிரிட்டனைச்‌ சேர்ந்த லூயிஸ்‌ கேப்ரியல்‌ டி மற்றும்‌ அவரது தோழியுமான அனுஷி எம்மா கிறிஸ்டின்‌ ஆகியோர்‌ சுற்றுலா விசாவில்‌ இந்தியாவிற்கு வந்திருந்தனர்‌‌.

அவர்கள்‌ ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராக மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர்.

இது தொடர்பாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் விளைவாக, அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனர். அதன் பிறகு, காவல்துறையினரின் உதவியுடன்‌ ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன.

சுற்றுலா விசாவில் இந்தியாவிற்குள் நுழைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது விதிகளுக்கு முரணான செயலாகும்‌.

ஆகையால், அவ்விருவரின் விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM