Enter your Email Address to subscribe to our newsletters

இந்தூர், 06 பிப்ரவரி (ஹி.ச.)
'கிரெய்ன்எக்ஸ் இந்தியா கண்காட்சி' என்ற பெயரில் பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் பிற உணவு பதப்படுத்தும் தொழில்கள் தொடர்பான அதிநவீன இயந்திரங்களுக்கான மூன்று நாள் தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சி, இன்று
(பிப்ரவரி 06) மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் வளாகத்தில் தொடங்குகிறது.
இந்தக் கண்காட்சியை அகில இந்திய பருப்பு ஆலைகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.
இந்தூரைச் சேர்ந்த பல உள்ளூர் தலைவர்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களுடன் தொடர்புடையவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக புது டெல்லி மற்றும் ஹரித்வாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் யாதவ், திட்டமிடப்பட்டபடி கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து நேரடியாக இந்தூருக்கு வருகிறார்.
இந்த கண்காட்சி குறித்து அகில இந்திய பருப்பு ஆலைகள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் அகர்வால் கூறுகையில்,
சீனா, துருக்கி, ஸ்பெயின், தைவான், கொரியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள், தங்களின் அதிநவீன தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் நேரடி செயல்விளக்கங்களை அளிக்கவுள்ளன.
மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன.
என்று அவர் தெரிவித்தார்.
பருப்பு வகைகள், அரிசி, மாவு, மசாலாப் பொருட்கள், கடலை மாவு, கோதுமை, அவல், மக்காச்சோளம், சோயா, பாஸ்தா, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சிறுதானியங்கள், விதைகள் மற்றும் பிற உணவு பதப்படுத்தும் துறைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் முழுமையான ஆலைகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இது வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான தகவல்களை ஒரே இடத்தில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b