மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நாளை நடைபெறவிருந்த பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு - சிபிஎஸ்இ அறிவிப்பு
புதுடெல்லி, 01 மார்ச் (ஹி.ச.) மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ ) உலகம் முழுவதும் 28 நாடுகளில் 240 பள்ளிகளை கொண்டு செயல்படுகிறது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி, மார்ச் 11ஆம் தேதி வர
CBSE announces postponement


புதுடெல்லி, 01 மார்ச் (ஹி.ச.)

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ ) உலகம் முழுவதும் 28 நாடுகளில் 240 பள்ளிகளை கொண்டு செயல்படுகிறது.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி, மார்ச் 11ஆம் தேதி வரை நடக்கிறது.

தொடர்ந்து, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் மூண்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெற இருந்த 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பக்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் நாளை (மார்ச் 2ஆம் தேதி) நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மார்ச் 3ம் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியம் மீண்டும் ஆலோசித்து மார்ச் 5ம் தேதி முதல் திட்டமிட்டுள்ள தேர்வுகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும்

என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / vidya.b