சிலிண்டர் தட்டுப்பாடு - மக்களை நெருக்கடிக்குள் தள்ளக்கூடாது என்று மாணிக்கம் தாகூர் எம்பி கருத்து!
சென்னை, 10 மார்ச் (ஹி.ச.) சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து,தனது எக்ஸ் தளத்தில், இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டின் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில், வ
Manickam Tagore


சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து,தனது எக்ஸ் தளத்தில்,

இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டின் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில், வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் பொதுமக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல்கள் மேலும் கவலை அதிகரிக்கின்றன.

இது மக்கள் முன்பே பார்த்த ஒரு நிலை. கோவிட் பேரிடர் காலத்தில், மத்திய பாஜக அரசின் தாமதமான மற்றும் போதியற்ற நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் மிகுந்த சுமையைச் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எரிபொருள் விநியோகம் என்பது ஒரு சிறிய நிர்வாக பிரச்சினை அல்ல. இது ஹோட்டல்கள், சிறு தொழில்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் தினசரி வாழ்வாதாரத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் சப்ளை நின்றுவிட்டால், பொருளாதாரம் நின்றுவிடும்.

இந்த நிலை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். எல்பிஜி மற்றும் பெட்ரோல் விநியோகத்தை உடனடியாக சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது.

மக்களுக்கு உடனடி பதிலும் நடவடிக்கையும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN