Enter your Email Address to subscribe to our newsletters

கொழும்பு, 10 மார்ச் (ஹி.ச.)
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஆண்களுக்கான கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், ஏப்ரல் 15 முதல் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
இதற்கு முன்பு, கிர்ஸ்டன் இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். 2011ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது, அந்த அணியை திறம்பட வழிநடத்திய பெருமை இவருக்கு உண்டு.
பிறகு, 2013ஆம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணியை எல்லா விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்திற்கு கொண்டு வந்தவர்.
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி, பாகிஸ்தானிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் காரணமாக, அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சனத் ஜெயசூர்யா அப்பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்த நிலையில்தான், கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM