Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 மார்ச் (ஹி.ச.)
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம், அதிகாரத்திற்காகத் தனது கொள்கைகளை தியாகம் செய்ததாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரேவை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே இன்று நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் விமர்சித்தார்.
இன்றைய மக்களவை விவாதத்தின் போது, செப்டம்பர் 26, 1969 அன்று ஒரு கும்பல் தன்னைத் தாக்குவதைத் தடுக்க தனது உரிமம் பெற்ற ரிவால்வரிலிருந்து காற்றில் சுட்ட சம்பவம் குறித்து பால் தாக்கரேவின் எழுத்துப்பூர்வ பதிலைப் நிஷிகாந்த் துபே பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து,நிஷிகாந்த் துபே கூறுகையில்,
சிவசேனா உத்தவ், கொஞ்சம் வெட்கப்பட வேண்டும். பாலா சாகேப் தாக்கரேவை கொல்லும் சதித்திட்டமும் 1969 இல் தீட்டப்பட்டது. அவரது ரிவால்வர் உரிமத்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
சதித்திட்டத்தை அறிந்த பிறகு, பாலா சாகேப் தாக்கரே தனது வாழ்நாளில் காங்கிரசுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.
அதிகாரத்திற்காக, கொள்கைகள் தியாகம் செய்யப்பட்டுள்ளன.
என்று கூறினார்.
சிவசேனா (UBT) கட்சியினர் வேறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும், காங்கிரஸுடனான கூட்டணிக்காக பாஜக பலமுறை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM