Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 மார்ச் (ஹி.ச.)
'உப்பு யாத்திரை' (Salt March) என அழைக்கப்படும் 'உப்பு சத்தியாகிரகம்' அல்லது 'தண்டி யாத்திரை' என்பது காலனித்துவ இந்தியாவில் மகாத்மா காந்தியால் முன்னின்று நடத்தப்பட்ட, வன்முறையற்ற ஒரு சட்டமறுப்புப் போராட்டமாகும்.
1930-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி, உப்பு மீது ஆங்கிலேய அரசு விதித்திருந்த கடுமையான வரியை எதிர்த்துப் போராடும் வகையில், மகாத்மா காந்தி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து, கடற்கரை கிராமமான தண்டி வரையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உப்பு யாத்திரையைத் தொடங்கினார்.
இது 24 நாட்கள் நடைபெற்ற ஒரு வன்முறையற்ற நடைப்பயணமாகும்.
இதுவே பிற்காலத்தில் மாபெரும் 'சட்டமறுப்பு இயக்கத்திற்கு' (Civil Disobedience Movement) வித்திட்டது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று, மகாத்மா காந்திக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி சத்தியாகிரகத்தில் பங்கேற்ற அனைத்து வீர சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பிரதமர் மோடி கூறுகையில்,
1930-ஆம் ஆண்டின் இதே நாளில் தண்டி யாத்திரை தொடங்கியது.
இதில் ஈடுபட்ட அனைத்து மகத்தான ஆளுமைகளையும் நாம் மரியாதையுடன் நினைவுகூருகிறோம், என்று குறிப்பிட்டார்.
துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும்எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில்
கூறியிருப்பதாவது,
1930-ஆம் ஆண்டின் இதே நாளில் மகாத்மா காந்தியின் தலைமையில் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி சத்தியாகிரகம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது 'சத்யம்' மற்றும் 'அகிம்சை' ஆகிய கொள்கைகளின் வாயிலாக நாடு தழுவிய சுயசார்பு உணர்வை ஊக்கப்படுத்தியது.
'பாபு'வுக்கும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரையில் பங்கேற்ற அனைத்து வீர சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். நாம் ஒரு சுயசார்பு இந்தியாவை கட்டமைத்து, வளர்ச்சியடைந்த இந்தியா எனும் தொலைநோக்குப் பார்வையை நோக்கிப் பயணிக்கும் வேளையில், அந்தச் சத்தியாகிரகம் விதைத்த சுயசார்பு உணர்வானது நமது தேசத்தின் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b