Enter your Email Address to subscribe to our newsletters

குவாஹாட்டி, 13 மார்ச் (ஹி.ச.)
அசாம் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் குவாஹாட்டி வந்தடைந்தார்.
குவாஹாட்டி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சார்மா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து, கோக்ரஜார் மாவட்டத்தில் ரூ. 4,570 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவிருந்தார். ஆனால், கனமழையின் காரணமாக கோக்ராஜார் செல்லும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோக்ரஜார் பகுதிக்காக அறிவிக்கப்பட்ட, ரூ. 4,570 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் மோடி தற்போது குவாஹாட்டிலிருந்தபடியே காணொலி வாயிலாகத் தொடங்கி வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று மாலை குவாஹாட்டியில் ரூ. 19,680 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் இம்மாநிலத்திற்கு மேற்கொள்ளும் நான்காவது வருகை இதுவாகும். இன்று இரவு குவாஹாட்டியில் தங்கி, நாளை சில்சார் நகருக்குச் சென்று, சுமார் ரூ. 23,550 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b