Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 14 மார்ச் (ஹி.ச.)
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரின்போது, ஹில்லி என்ற போர்க்களத்தில் தனது படையை வழி நடத்திய வி.ஆர்.சுவாமிநாதன் பாகிஸ்தான் படையைச் தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்.
வங்கதேச விடுதலைப் போருக்கு முன்பாக 1961 கோவா விடுதலையிலும், நாகாலாந்து கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் பங்கேற்றவர் வி.ஆர்.சுவாமிநாதன். ராணுவத்தில் பிரிகேடியர் நிலைக்கு உயர்ந்த இவர்
1986-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
வயது முதிர்வு காரணமாக மூச்சு விடுவதில் சிரமத்தைச் சந்தித்து வந்த வி.ஆர்.சுவாமிநாதன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 14) அவர் காலமானார். அவரது மனைவி வசந்தி ஏற்கெனவே காலமாகிவிட்டார்.
இந்த தம்பதியருக்கு தரங்கிணி, தீபா, ஜோதி ஆகிய மூன்று மகள்கள். மூன்றாவது மகள் இறந்துவிட்டார்.
அருண், சுரேஷ், சேஷாத்ரி ஆகிய மூன்று மருமகன்களும் பேரக்குழந்தைகளும் இவருக்கு உள்ளனர். வி.ஆர். சுவாமிநாதனின்
இறுதிச் சடங்குகள் கோவையில் நாளை (மார்ச் 15) நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b