Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)
கோவையில் காவல் உயர் அதிகாரி பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விடியா திமுக அரசை விரட்டியடிப்போம்! என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
கோவையில் மதுக்கரை சிறப்புக் காவல் கமாண்டண்ட் அதிகாரி ஒருவர் பெண் காவலரை காவல் நிலைய அலுவலத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் லட்சணத்தைப் பட்டவர்த்தனமாக்குகிறது.
காவலராகப் பணிபுரியும் பெண்ணின் பாதுகாப்பைக் காவல் நிலையத்தில் வைத்தே உறுதி செய்ய இயலாத திறனற்ற திமுக ஆட்சி எப்படி ஒரு சாதாரண பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும்? வெல்வதை விடுங்கள், இந்த ஆட்சியில் எப்படி ஒரு பெண் நிம்மதியாக வாழ முடியும்?
சட்டம் ஒழுங்கை சரிசெய்ய இயலாத திமுக ஆட்சியில், பெண்கள் மடிந்ததும், துடித்ததும் போதும்! விடியா திமுக அரசை விரட்டியடிப்போம்! தமிழக மகளிரைக் காப்போம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b