சரக்கு வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 6 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
கோவை, 17 மார்ச் (ஹி.ச.) தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்து வருபவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் இல்லாத பட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெ
K


கோவை, 17 மார்ச் (ஹி.ச.)

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்து வருபவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் இல்லாத பட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் காண்பிக்கப்படும் பட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்படாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் 90 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் கோவை ப்ரூக்ஃபீல்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த பொழுது அதில் ரொக்கமாக 6 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது.

அதுகுறித்து வாகன ஓட்டுநரிடம் கேட்ட பொழுது,

சாக்லேட் மற்றும் உணவிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை கோவை மத்திய மண்டல தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்தால் பணம் திருப்பி தரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / Durai.J