Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 18 மார்ச் (ஹி.ச.)
மக்காச்சோள விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) அமல்படுத்தல் மற்றும் கூடுதலாக ₹500 போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியினர் மாநில சட்டமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான நிலை உருவானது.
பி.ஆர்.எஸ் நிர்வாகிகள் கன் பார்க்கில் இருந்து சட்டமன்றம் நோக்கி பேரணி நடத்தினர்.
ஆனால், நுழைவாயிலில் பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்கள் காவல்துறையினரும் சட்டமன்ற மார்ஷல்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மார்ஷல்கள் கடுமையாக நடந்துகொண்டதாகவும், போராட்டத்தின் அடையாளமாக கொண்டு வரப்பட்ட மக்காச்சோளத்தை வலுக்கட்டாயமாக பறித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஏற்பட்ட மோதலில், முன்னாள் அமைச்சரும் பி.ஆர்.எஸ் துணை அவைத் தலைவருமான டி. ஹரிஷ் ராவ் கையில் காயமடைந்தார்.
அவர் கையில் இரத்தம் சொட்டிய நிலையில் காணப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து, பி.ஆர்.எஸ் உறுப்பினர்கள் சட்டமன்ற நுழைவாயிலில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், ஆட்சியின் செயல்பாடுகளை ‘காவல் அரசு’ என விமர்சித்தனர். பின்னர் அவர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர்.
இந்தச் சம்பவம், ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ்-க்கும் இடையிலான அரசியல் மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும், மாநிலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM