Enter your Email Address to subscribe to our newsletters

காந்திநகர், 18 மார்ச் (ஹி.ச.)
குஜராத் சட்டமன்ற வளாகத்திற்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது.
இதையடுத்து வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, சட்டமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனைகள் நடைபெற்றன.
வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் பயிற்சி பெற்ற மோப்பநாய் படை சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் ரவி தேஜா வசம்ஷெட்டி கூறியதாவது,
வெடிகுண்டு சோதனை குழுக்கள் பகுதிகளை ஆய்வு செய்த பிறகு எவ்வித சந்தேகத்திற்குரிய பொருளும் காணப்படவில்லை.
இதன் பேரில் சட்டமன்றப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
மின்னஞ்சல் அனுப்பிய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM