இந்தியப் புத்தாண்டு பண்டிகைகளையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து
புதுடெல்லி, 19 மார்ச் (ஹி.ச.) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குடி பத்வா, சித்திரை நவராத்திரி, உகாதி, சஜிபு செய்ராவோபா, செட்டி சந்த் மற்றும் நவ்ரே உள்ளிட்ட புத்தாண்டு சார்ந்த பண்டிகைகளை முன்னிட்டு இன்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டார். இந்தப் பண்ட
இந்தியப் புத்தாண்டு பண்டிகைகளையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து


புதுடெல்லி, 19 மார்ச் (ஹி.ச.)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குடி பத்வா, சித்திரை நவராத்திரி, உகாதி, சஜிபு செய்ராவோபா, செட்டி சந்த் மற்றும் நவ்ரே உள்ளிட்ட புத்தாண்டு சார்ந்த பண்டிகைகளை முன்னிட்டு இன்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டார்.

இந்தப் பண்டிகைகள் இந்துப் புத்தாண்டைக் குறிக்கும் மங்களகரமான தருணங்கள் எனக் குறிப்பிட்ட அவர், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் புதிய தொடக்கங்கள் நிரம்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில்,

அனைவருக்கும் குடி பத்வா, சித்திரை நவராத்திரி, உகாதி, சஜிபு செய்ராவோபா, செட்டி சந்த் மற்றும் நவ்ரே ஆகிய இனிய பண்டிகைகள் அமைய வாழ்த்துகள்.

இந்த மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் புதிய தொடக்கங்களை கொண்டு வரட்டும்.

என பதிவிட்டுள்ளார்.

இதே வேளை, வசந்த காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் இப்பண்டிகைகள் இந்தியாவின் கலாச்சார செழுமை மற்றும் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ராவும் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM