Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 மார்ச் (ஹி.ச.)
சைத்ர நவராத்திரியின் இரண்டாம் நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பக்தர்கள் உற்சாகமாக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்ள ஜண்டேவாலன் மற்றும் சத்தர்பூர் கோவில்கள், குஜராத்தின் அம்பாஜி மாதா கோவில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரளாகக் கூடினர்.
துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஒன்பது நாள் திருவிழாவின் இரண்டாம் நாளில் நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டின்போது கோவில் மணிகளின் ஓசையும் பக்திப் பாடல்களும் சூழலை முழுவதும் ஆன்மிகமயமாக மாற்றின.
உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் அமைந்துள்ள மாயா தேவி கோவிலிலும் பக்தர்கள் பெருமளவில் திரண்டு வழிபாடு நடத்தினர்.
சைத்ர நவராத்திரி இந்துப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் முக்கியமான விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த ஒன்பது நாட்களிலும் பக்தர்கள் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை வழிபட்டு விரதங்களை மேற்கொள்வதுடன், செழிப்பு மற்றும் நலன் வேண்டி பல்வேறு சடங்குகளையும் அனுசரிக்கின்றனர்.
இத்திருவிழா, ஸ்ரீராமபிரானின் அவதார தினமான ராம நவமியுடன் நிறைவடைகிறது.
அந்த நாளில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதுடன், நாடு முழுவதும் சிறப்பு பூஜைகள், இரவு நேர பக்தி நிகழ்ச்சிகள் (ஜாக்ரன்) மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM