ஐ.பி.எல் போட்டித் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிக்கான திட்டம் - டு பிளெஸ்ஸிஸ் ஆலோசனை
கொல்கத்தா, 20 மார்ச் (ஹி.ச.) 10 அணிகள் பங்குபெறும் 19-வது ஐ.பி.எல் போட்டித் தொடர் 28-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல நகரங்களில் நடக்கவுள்ளது. இதன் காரணமாக, 10 அணிகளின் ஆட்டக்காரர்களும், இப்பொழுதே பயிற்சியை ஆரம்பித்துவிட்டனர். இந
ஐ.பி.எல் போட்டித் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிக்கான திட்டம் - டு பிளெஸ்ஸிஸ் ஆலோசனை


கொல்கத்தா, 20 மார்ச் (ஹி.ச.)

10 அணிகள் பங்குபெறும் 19-வது ஐ.பி.எல் போட்டித் தொடர் 28-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல நகரங்களில் நடக்கவுள்ளது.

இதன் காரணமாக, 10 அணிகளின் ஆட்டக்காரர்களும், இப்பொழுதே பயிற்சியை ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ் கொல்கத்தா அணியைப் பற்றி அளித்த ஒரு பேட்டியில்,

நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பொறுப்பில் இருந்தால் ஈடன் கார்டன் விளையாட்டுத் தள பராமரிப்பாளரை பந்து வீசுவதற்குச் சாதகமாக மாற்றுமாறு அமைக்க சொல்லி இருப்பேன்.

வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் ஆகிய இரண்டு திறமையான பந்து வீச்சாளர்கள் அமைந்தது கொல்கத்தா அணிக்கு ஒரு நல்ல விஷயமாகும்.

இப்போது அவர்கள் இருவரும் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள். எந்த மாதிரியான விளையாட்டு தளத்திலும் அவர்களால் அருமையாக பந்து வீசி பேட்ஸ்மேனுக்கு சிரமத்தை கொடுக்க முடியும்.

வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிகரமாக விளையாட வேண்டுமென்றால் அவர்கள் இருவரும் நன்றாக பந்து வீச வேண்டும்.

அந்த இரண்டு வீரர்களையும் மனதில் வைத்து விளையாட்டு தளத்தை தயார் செய்ய வேண்டும்.

என தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM