ராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரமத்தில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைத்தார்
பிருந்தாவனம், 20 மார்ச் (ஹி.ச) சுகாதாரப் பராமரிப்பில் நவீன மருத்துவ அறிவியலையும் கருணையையும் இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (மார்ச் 20) உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ராமகிருஷ
President Murmu inaugurates oncology block


பிருந்தாவனம், 20 மார்ச் (ஹி.ச)

சுகாதாரப் பராமரிப்பில் நவீன மருத்துவ அறிவியலையும் கருணையையும் இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (மார்ச் 20) உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் சேவாஷ்ரமத்தில் நந்த கிஷோர் சோமானி புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் கூறியதாவது,

ராமகிருஷ்ண மிஷன் ஆன்மீக உணர்வு மற்றும் மனிதாபிமான சேவை ஆகிய இரண்டின் சங்கமம் ஆகும். அன்பு, கருணை மற்றும் தன்னலமற்ற சேவை மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகள் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.

புற்றுநோய் மிகவும் கடுமையான சுகாதார சவால்களில் ஒன்றாகத் தொடர்கிறது. உயிர்களைக் காப்பாற்றுவதற்கு சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவதும், தரமான சிகிச்சையைப் பெறுவதும் மிகவும் அவசியம். சிகிச்சையின் அதிக செலவு பல குடும்பங்களுக்கு முறையான சிகிச்சையைப் பெறுவதை கடினமாக்குகிறது. மேலும் இந்த இடைவெளியைக் குறைப்பதில் சேவை சார்ந்த நிறுவனங்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்.

புற்றுநோயை எதிர்கொள்வதில் விழிப்புணர்வு, ஆரம்பகால பரிசோதனை மற்றும் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு வலிமையான மற்றும் தன்னிறைவு பெற்ற தேசத்தைக் கட்டியெழுப்புவது, அதன் குடிமக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதைச் சார்ந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான புற்றுநோய் சிகிச்சை உட்பட, நாடு முழுவதும் மலிவான மற்றும் தரமான சுகாதார சேவைகளை விரிவுபடுத்த உதவுகின்றன.

சேவை மனப்பான்மையால் உருவாகும் மருத்துவ நிறுவனங்கள் நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை, கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன.

ராமகிருஷ்ண மிஷன் சேவாஷ்ரமத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. புதிதாகத் திறக்கப்பட்ட புற்றுநோயியல் பிரிவு, இப்பகுதியில் சுகாதார சேவைகளை கணிசமாக மேம்படுத்தி, வரும் ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் பங்களிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b