பெருநிறுவனச் சட்ட திருத்த மசோதா 2026 - மக்களவையில் இன்று அறிமுகம்
புதுடெல்லி, 23 மார்ச் (ஹி.ச.) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருநிறுவனச் சட்ட திருத்த மசோதா 2026-ஐ மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தினார். விரிவான பரிசீலனைக்காக இந்த மசோதாவை ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (JPC) அனுப்புவதற்கான தீர்ம
Companies (Amendment) Bill


புதுடெல்லி, 23 மார்ச் (ஹி.ச.)

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருநிறுவனச் சட்ட திருத்த மசோதா 2026-ஐ மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தினார்.

விரிவான பரிசீலனைக்காக இந்த மசோதாவை ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (JPC) அனுப்புவதற்கான தீர்மானத்தை மக்களவை நிறைவேற்றியது.

இந்த மசோதா, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம், 2008 மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2013 ஆகியவற்றில் மேலும் திருத்தங்களுக்கு உட்படுத்துவதாக அமைகிறது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் மீண்டும் தொடங்கும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருநிறுவனச் சட்ட திருத்த மசோதாவுடன், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதித் திட்டங்களை எடுத்துக்கூறும் நிதி மசோதா, 2026-ஐயும் நிதியமைச்சர் பரிசீலனைக்கு கொண்டு வர உள்ளார்.

நடவடிக்கைகளின் போது, இந்திய தேசிய காங்கிரஸ் (INC) எம்.பி. மணீஷ் திவாரி கூறுகையில், அத்தியாவசிய சட்டமன்றப் பணிகளை வரம்பு மீறி ஒப்படைப்பது என விமர்சனம் செய்து இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதை எதிர்த்தார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 2 மணிக்கு மக்களவையில் உரையாற்றவுள்ளார்.

அப்போது, நடைபெற்று வரும் மேற்கு ஆசிய மோதலின் முக்கிய அம்சங்களையும், இது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவர் எடுத்துக்கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b