Enter your Email Address to subscribe to our newsletters

ராய்கர், 24 மார்ச் (ஹி.ச.)
சத்தீஸ்கர் நவீன் காட் கிராமத்தில் பல பண்ணைகளில் அபின் பயிரிடப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சட்டவிரோத போதைப்பொருள் செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் இல்லாத மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில், தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளை கண்காணிக்கவும், சட்டவிரோத சாகுபடிகளை கண்டறியவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து எஸ்எஸ்பி சசி மோகன் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லலுங்கா காவல் நிலைய வரம்புக்குட்பட்ட நவீன் காட் கிராமத்தில் அபின் சாகுபடி நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோது, சாது ராம் நாக்வன்ஷி, ஜகத் ராம் நாக்வன்ஷி மற்றும் அபிமன்யு நாக் ஆகியோரின் நிலங்களில் அபின் செடிகள் வளர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
நில உரிமையாளர்கள் மற்றும் இதில் தொடர்புடையவர்களின் பங்களிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை முடிவுகளின் அடிப்படையில், என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்.
தேவையானால் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
என்று கூறினார்
Hindusthan Samachar / JANAKI RAM