Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 மார்ச் (ஹி.ச.)
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு அரசியலில் அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்றும், அதேவேளையில் மசோதாவின் துல்லியமான வடிவமைப்பு மற்றும் அமலாக்க விவரங்கள் குறித்து தெளிவு தேவைப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தெரிவித்ததாவது:
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொள்கை ரீதியாக நாங்கள் ஆதரிக்கிறோம். பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மசோதாவின் சரியான கட்டமைப்பு மற்றும் அமலாக்க நடைமுறை குறித்து இன்னும் தெளிவு இல்லை.
மசோதா அமலுக்கு வரும் வரை காத்திருக்காமல், அரசியல் கட்சிகள் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் திருத்த மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முயற்சியை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், திட்டத்தின் விவரங்கள் குறித்து தெளிவான தகவல் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ‘நாரி சக்தி வந்தன் சட்டம்’ தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b