Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 29 மார்ச் (ஹி.ச.)
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபையின் பதவிக்காலம் மே 7ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு, ஏப்ரல் 23ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 29ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், தேர்தல் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர் பயன்படுத்தும் வாகனங்களில் லைவ் வீடியோ பதிவு செய்யும் கேமரா வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை நேரடியாக பதிவு செய்து கண்காணிக்க இந்த ஏற்பாடு உதவும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் புகார்கள் தெரிவிக்க 1950 என்ற கால் சென்டர் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளும் இதைப் பயன்படுத்த முடியும். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் ‘சி-விஜில்’ செயலியின் மூலமும் அளிக்கலாம்.
இந்தத் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 5,173 பறக்கும் படைகள் மற்றும் 5,200 கண்காணிப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
பெறப்படும் புகார்கள் 100 நிமிடங்களுக்குள் பரிசீலிக்கப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM