ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் - பீஹார் வேளாண் அமைச்சர்
பாட்னா, 30 மார்ச் (ஹி.ச.) பீஹார் மாநிலத்தில் பரவலாக நேற்று இரவு பெய்த பலத்த ஆலங்கட்டி மழை மற்றும் சூறைக்காற்றின் தாக்கத்தால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு மாநில அரசு ம
Bihar Agriculture Minister


பாட்னா, 30 மார்ச் (ஹி.ச.)

பீஹார் மாநிலத்தில் பரவலாக நேற்று இரவு பெய்த பலத்த ஆலங்கட்டி மழை மற்றும் சூறைக்காற்றின் தாக்கத்தால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு மாநில அரசு முழுமையான ஆதரவு வழங்கும் என்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில வேளாண் அமைச்சர் ராம் கிருபால் யாதவ் இன்று உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து, சேதங்களை உடனடியாக மதிப்பிட்டு விரிவான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சேத மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தானாபூர் துணைப் பிரிவு அலுவலர் அனிருத் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b