குவைத்தில் உயிரிழந்த 20 இந்தியர்கள் உடல்கள் கேரளாவுக்கு வந்தடைந்தது
கொச்சி, 01 ஏப்ரல் (ஹி.ச.) குவைத்தில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 20 இந்திய குடிமக்களின் உடல்கள் இன்று கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தன. உயிரிழந்தவர்களில் ஒருவர், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்
குவைத்தில் உயிரிழந்த 20 இந்தியர்கள் உடல்கள் கேரளாவுக்கு வந்தன


கொச்சி, 01 ஏப்ரல் (ஹி.ச.)

குவைத்தில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 20 இந்திய குடிமக்களின் உடல்கள் இன்று கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தன.

உயிரிழந்தவர்களில் ஒருவர், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த 37 வயதான சந்தான செல்வம் கிருஷ்ணன். இவர் குவைத்தில் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்தார்.

மற்ற 19 பேர் தனித்தனி சம்பவங்கள் மற்றும் இயற்கைக் காரணங்களால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், அப்பகுதியில் நிலவும் மோதலால் அவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வரும் பணி தாமதமாகியுள்ளது.

வளைகுடா பகுதியில் மோதல்கள் இரண்டாவது மாதத்திற்கு நுழைந்துள்ள நிலையில், மேற்கு ஆசியாவில் மொத்தம் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு நபர் காணாமல் போயுள்ளதாகவும் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையே, குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த சந்தானசெல்வம் கிருஷ்ணன் பற்றிய இரங்கலை குவைத் இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

தூதரகம், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM