இன்று முதல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்
சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.) தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று திருத்தணி, நாளை பல்லாவரம், நாளை மறுநாள் குடியாத்தம், 4-ம்
Premalatha Vijayakant


சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.)

தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று திருத்தணி, நாளை பல்லாவரம், நாளை மறுநாள் குடியாத்தம், 4-ம்

தேதி போளூர், 5-ம் தேதி மைலம், 6ம் தேதி விருத்தாசலம், 10-ம் தேதி தருமபுரி, 11-ம் தேதி ஓமலூர், 12-ம் தேதி சேலம் மேற்கு ஆகிய தொகுதிகளில் முறையே கிருஷ்ண மூர்த்தி, அனகை முருகேசன், பிரதாப், சரவணன், வெங்கடேசன், ஏ.ஆர் இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் செய்கிறார்.

13, 14-ல் மீண்டும் விருத்தாசலத்தில் பிரச்சாரம் செய்கிறார்.

15-ல் சென்னை சட்டமன்ற தொகுதியிலும், 16, 17-ல் விருது நகரில் விஜயபிரபாகரனை ஆதரித்தும், 18 முதல் 21-ம் தேதி வரை மீண்டும் விருத்தாசலத்திலும் பிரச்சாரம் செய்கிறார் என கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ