Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா பிரதேசம், 10 ஏப்ரல் (ஹி.ச.)
ஆந்திர பிரதேசம்,மாச்சேர்லாவைச் சேர்ந்த அரசு அலுவலகத்தில் பணியாற்றும் பெண், ஏப்ரல் 2ஆம் தேதி தன்னை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகள் மற்றும் மொபைல் தகவல்களை ஆய்வு செய்த போலீசார், ராஜுபாளேம் பகுதியைச் சேர்ந்த நாமாலா ஸ்ரீனிவாஸ் என்பவரை அடையாளம் கண்டனர்.
இவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ச்னாப்சாட் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
சம்பவம் நடந்த நாளில், பெண் கூகுள் மேப்ஸ் மூலம் தனது வீட்டின் இருப்பிடத்தை பகிர்ந்து, ஸ்ரீனிவாஸை அழைத்துள்ளார்.
வீட்டிற்கு வந்த அவர், பெண்ணை வலுக்கட்டாயமாக அணுக முயன்றதாகவும், பெண் எதிர்த்ததால் வன்முறையாக நடந்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முதலில், பாதிக்கப்பட்ட பெண் உண்மையை மறைத்து, அடையாளம் தெரியாத நபர் தாக்கி பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.
ஆனால் தொடர்ந்து நடந்த விசாரணையில் உண்மை வெளிவந்தது.
இதையடுத்து, ஏப்ரல் 8ஆம் தேதி மாச்சேர்லா ரயில் நிலையத்தில் நாமாலா ஸ்ரீனிவாஸ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA