அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் சாரட் குதிரைவண்டியில் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு
கோவை, 11 ஏப்ரல் (ஹி.ச.) தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன் பாளையம் பகுதி ஆவாரம்பாளையம், இ.பி. காலனி, வி. ஜி. ராவ் நகர், பகுதிகளில் சாரட் க
C


கோவை, 11 ஏப்ரல் (ஹி.ச.)

தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி

அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன் பாளையம் பகுதி ஆவாரம்பாளையம்,

இ.பி. காலனி, வி. ஜி. ராவ் நகர், பகுதிகளில் சாரட் குதிரை வண்டியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

அப்பகுதி பொதுமக்கள் வேட்பாளர் கே ஆர் ஜெயராமுக்கு மேள தாளங்கள் முழங்க பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில்

பகுதி செயலாளர்கள் மௌனசாமி, வார்டு செயலாளர்கள் சி கே டி யுவராஜ், சந்தானம், ராஜ்குமார் அரவிந்த் ,ரமேஷ், ரகுநாத், சால்ட் வெள்ளியங்கிரி, ரகுபதி, சாரமேடு பெருமாள்,

தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக மற்றும் அமமுக, பாமக, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் அதிமுக நிர்வாகிகள், மற்றும் செயல்வீரர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA