2026 கேரள சட்டமன்ற தேர்தல் - வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வை
திருவனந்தபுரம் , 12 ஏப்ரல் (ஹி.ச.) கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 9 நாடுகளைச் சேர்ந்த 17 சர்வதேச பிரதிநிதிகள் இந்தியாவின் தேர்தல் செயல்முறையை நேரில் பார்வையிட்டனர் Election Commission of India சார்பில் நடத்தப்பட்ட சர
K


திருவனந்தபுரம் , 12 ஏப்ரல் (ஹி.ச.)

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 9 நாடுகளைச் சேர்ந்த 17 சர்வதேச பிரதிநிதிகள் இந்தியாவின் தேர்தல் செயல்முறையை நேரில் பார்வையிட்டனர்

Election Commission of India சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச தேர்தல் பார்வையாளர் திட்டம் (IEVP) 2026ன் கீழ், அல்பேனியா, எஸ்டோனியா, பிஜி, ஜார்ஜியா, கென்யா, நமீபியா, சமோவா, சேஷெல்ஸ் மற்றும் சியாரா லியோன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த பிரதிநிதிகள், இந்திய தேர்தல் முறையின் பரந்த அளவு, துல்லியம் மற்றும் சுறு சுறுப்பை நேரில் கண்டறிந்தனர் என்று கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் தெரிவித்தார்.

இதில், எஸ்டோனியா, பிஜி, ஜார்ஜியா, நமீபியா மற்றும் கென்யா நாடுகளைச் சேர்ந்த 10 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டனர்.

மேலும், அல்பேனியா, சமோவா, சேஷெல்ஸ் மற்றும் சியாரா லியோன் நாடுகளைச் சேர்ந்த 7 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கவனித்தனர்.

பார்வையின் போது, வாக்குப்பதிவு நடைமுறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் மேலாண்மை குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்தனர்.

இந்த சர்வதேச பார்வை, இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA