இன்று மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் 100-வது பிறந்த நாள் - பிரதமர் மோடி அஞ்சலி
புதுடெல்லி, 17 ஏப்ரல் (ஹி.ச.) 1927, ஏப்ரல் 17 அன்று பிறந்த சந்திரசேகர் 1990 நவம்பர் முதல் 1991 ஜூன் வரை இந்தியாவின் எட்டாவது பிரதமராகப் பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன், ஜனதா தளத்தின் ஒரு பிரிவு அமைத்த அரசை அ
Today marks the 100th birth anniversary of the late former Prime Minister Chandrashekhar


புதுடெல்லி, 17 ஏப்ரல் (ஹி.ச.)

1927, ஏப்ரல் 17 அன்று பிறந்த சந்திரசேகர் 1990 நவம்பர் முதல் 1991 ஜூன் வரை இந்தியாவின் எட்டாவது பிரதமராகப் பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன், ஜனதா தளத்தின் ஒரு பிரிவு அமைத்த அரசை அவர் வழிநடத்தினார்.

மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கிய அவர், புரட்சிகர உத்வேகம் கொண்ட தீவிர இலட்சியவாதியாக அறியப்பட்டார்.

1950-51-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, சோசலிச இயக்கத்தில் இணைந்து ஆச்சார்யா நரேந்திர தேவுடன் நெருக்கமாகப் பணியாற்றினார்.

பல்லியா மாவட்ட பிரஜா சோசலிச கட்சியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஓராண்டுக்குள் உத்தரப் பிரதேச மாநில பிரஜா சோசலிச கட்சியின் இணைச் செயலாளரானார். 1955-56-ல் உ.பி. மாநில பிரஜா சோசலிச கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.

1962-ல் உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகர், 1965 ஜனவரியில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1967-ல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் நூற்றாண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது,

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஜி அவர்களின் பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துகிறேன். இந்த ஆண்டு அவரது 100-வது பிறந்த ஆண்டின் தொடக்கமாகும். வளமான, நீதியான இந்தியாவுக்கான அவரது தொலைநோக்கை நனவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இது.

துணிச்சல், கொள்கை உறுதி, ஜனநாயக விழுமியங்களில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்ட மக்கள் தலைவராக சந்திரசேகர் ஜி நினைவுகூரப்படுகிறார்.

இந்திய மண்ணில் உறுதியாக வேரூன்றியவர், சாமானிய மக்களின் எதிர்பார்புகளுக்கு உணர்வுபூர்வமாக செவிசாய்தவர். பொது வாழ்வில் எளிமையையும் தெளிவையும் கொண்டு வந்தார். நாட்டின் வளர்ச்சி குறித்து அவருடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட தருணங்களை நான் நினைவுகூர்கிறேன்.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் குறித்து இந்திய இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b