Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 20 ஏப்ரல் (ஹி.ச.)
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சோதனையில் இன்று (20.04.2026) வரை கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.
ரொக்கத்தொகை: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் ரூ. 1,68,23,718 (ஒரு கோடியே 68 லட்சத்து 23 ஆயிரத்து 718 ரூபாய்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொருட்கள்: பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 38,36,412 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுபானங்கள்: தேர்தல் விதிமுறைகளை மீறி கடத்தப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த ரூ. 6,18,317 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களின்றிப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b