மே 4-ம் தேதி ஆட்சி அமைத்தவுடன், முதல் நாளிலிருந்தே தேர்தல் அறிக்கையை அமல்படுத்த்துவோம் - வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன்
சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.) வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், அத்தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார். தேர்தல் பிரசாரத்தின் போது இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, 234 உறுப்ப
ஹி.ச


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், அத்தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.

தேர்தல் பிரசாரத்தின் போது இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கிறோம். 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறுவோம் என நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம். நாட்கள் செல்லச் செல்ல நிலைமை இன்னும் சிறப்பாக உள்ளது. அதைவிட அதிகமாகவே வெல்வோம் என நினைக்கிறேன்.

மே 4-ம் தேதி ஆட்சி அமைத்தவுடன், முதல் நாளிலிருந்தே தேர்தல் அறிக்கையை அமல்படுத்தத் தொடங்குவோம்.

தனது தொகுதியில் அரசின் நலத்திட்டங்கள் ஏற்கெனவே மக்களைச் சென்றடைந்துள்ளது. என் தொகுதியில் அரசின் பெரும்பாலான திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துவிட்டன. மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். வில்லிவாக்கம் மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

பிரச்சாரத்தின் போது கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தேர்தல் அறிக்கைதான் இந்தப் பிரச்சாரத்தின் நாயகனாக இருந்தது. அறிக்கை குறித்தும் அது எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்தும் அறிய மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

மகளிர் இடஒதுக்கீட்டுத் திருத்த மசோதா விவகாரத்தில் பாஜக மக்களைத் தவறாக வழிநடக்கிறது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்குள் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மறைக்கப் பார்த்தார்கள். அது இயல்பான வடிவத்தில் வரும்போது நாங்கள் ஆதரிப்போம். தாங்கள் தோற்றதை மறைக்க ஒரு காரணத்தைத் தேடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b