புவிசார் அரசியல் எல்லைகளை உலுக்கும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை
வடகொரியா, 20 ஏப்ரல் (ஹி.ச) வடகொரியா கிளஸ்டர் குண்டு வெடிப்பு தலைகள் பொருத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக தனது ராணுவ திறனை மேம்படுத்தும் நோக்கில், இந்
North Korea's Missile Test


வடகொரியா, 20 ஏப்ரல் (ஹி.ச)

வடகொரியா கிளஸ்டர் குண்டு வெடிப்பு தலைகள் பொருத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக தனது ராணுவ திறனை மேம்படுத்தும் நோக்கில், இந்த மாதத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும்.

அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட தகவலின்படி,

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள் கிம் ஜு ஏ ஆகியோர் கடற்கரை பகுதியில் இருந்து ஏவுகணை சோதனைகளை நேரில் கண்காணித்தனர்.

மேம்படுத்தப்பட்ட ஹுவாசாங்-11 Ra ரக ஏவுகணைகள், குறிப்பிடப்பட்ட தீவு இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் முடிவுகள் குறித்து திருப்தி தெரிவித்த கிம், ராணுவத்தின் தாக்குதல் திறனை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இதற்கு முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் கிளஸ்டர் குண்டு வெடிப்பு தலைகள் பொருத்தப்பட்ட ஹுவாசாங்-11 Ka ரக ஏவுகணைகளையும் வடகொரியா சோதித்திருந்தது.

பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய கிளஸ்டர் குண்டுகளுக்கு சர்வதேச அளவில் முழுமையான தடை இல்லை.

வடகொரியா, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இவற்றை தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

2019-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில், வடகொரியா தனது ஆயுதக் கிடங்கை வலுப்படுத்தி வருகிறது.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங் உச்சி மாநாடு நடைபெற வாய்ப்புள்ள சூழலில், எதிர்கால பேச்சுவார்த்தைகளில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில் வடகொரியா தொடர்ந்து ராணுவ சோதனைகளை நடத்தி வருகிறது.

Hindusthan Samachar / vidya.b