கேரளாவில் தொடர் மின்வெட்டுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் போராட்டம்
இடுக்கி, 26 ஏப்ரல் (ஹி.ச.) கேரளாவில் வெப்ப அலை காரணமாக 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், இடுக்கி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன
Youth Congress protests


இடுக்கி, 26 ஏப்ரல் (ஹி.ச.)

கேரளாவில் வெப்ப அலை காரணமாக 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், இடுக்கி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று இடுக்கியில் உள்ள கேரள மாநில மின்சார வாரிய (KSEB) அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்சியான மின்தடைகள் குடியிருப்பாளர்களுக்கு, குறிப்பாக படுக்கையில் இருக்கும் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி, அவர்களின் உடல்நலம் மற்றும் அன்றாட வாழ்கையை பாதித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய கேரள மாநில மின்சார வாரிய அதிகாரிகள் இப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இனி இதுபோன்ற மின்தடைகள் ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளனர்.

அதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

எனினும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மேலும் தீவிர போராட்டங்கள் நடத்தப்படும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (ஏப்ரல் 26 ) கேரளா முழுவதும் 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 27 வரை வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை நீடிக்கும் என்றும், மே 1 வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b